என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக கருப்புக் கொடி

நிலம் கையகப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக கருப்புக் கொடி
x
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்பு கொடியேற்றி, போராட்டத்தில் ஈடுபட்டனர். என்எல்சி நிறுவனம்,  3 வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விருத்தாசலம் மற்றும் புவனகிரி வட்டாரங்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகர ஆலம்பாடி கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு நிலம் வழங்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்