மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய்

கள்ளக்காதலை காட்டிக் கொடுத்ததால் ஆத்திரம்
மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய்
x
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, ஐந்து வயது சிறுமியை, தாயே கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆத்தூர் அருகே வீரகனூர் இலுப்ப நத்தம் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்கு வெங்கடேஷ் என்பவருடன், தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பிரியங்காவின் 5 வயது மகள் ஷிவானி, தனது தந்தையிடம் போனில்  கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தள்ளி, ஷிவானியை கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர் மீது கொலைவழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்