வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் : கடத்தி வந்த இருவரிடம் அதிகாரிகள் விசாரணை

714 கிராம் தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல்
வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் : கடத்தி வந்த இருவரிடம் அதிகாரிகள் விசாரணை
x
துபாயிலிருந்து  திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில்  பயணிகளின் உடைமைகளை,  அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரோஸ் என்ற பயணி 514 கிராம் தங்கத்தை பற்பசை போல் மாற்றி, ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதேபோல, மலேசியாவை சேர்ந்த கணேசன் என்பவரிடம் இருந்த 190 கிராம் எடையுள்ள தங்க செயினையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்