விதிமீறிய 39 கட்டடங்களின் மின்இணைப்பு துண்டிப்பு

பழைய மாஸ்டர் பிளானை மாற்ற வேண்டும் என புகார்
விதிமீறிய 39 கட்டடங்களின் மின்இணைப்பு துண்டிப்பு
x
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட 39 கட்டடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு முரணாக கட்டியுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மூஞ்சிக்கல் அண்ணாசாலை, லேக் ரோடு, நாயுடுபுரம் உள்ளிட்ட 39 கட்டடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனிடையே, மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா பயணிகள் வருகை அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாஸ்டர் பிளான் என்ற திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள கட்டட உரிமையாளர்கள், 1983-ம் ஆண்டின் மாஸ்டர் பிளான் இன்றுவரை மாற்றப்படாமல் உள்ளதாக கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்