வாகன சோதனையில் சிக்கிய போலி தாசில்தார்

அரசு முத்திரையிட்ட கார், ரப்பர் ஸ்டாம்ப்கள் பறிமுதல்
வாகன சோதனையில் சிக்கிய போலி தாசில்தார்
x
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசு முத்திரை கொண்ட காரில் சந்தேகத்தின் பெயரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் தன்னை தாசில்தார் என்று கூறியுள்ளார். பின்னர் விசாரணையில் பழனிவேல் பொய் கூறியது கண்டுப்பிடிக்கப்பட்டு அவரிடமிருந்த தமிழ்நாடு அரசு முத்திரையிட்ட கார், தாசில்தார் என்கிற போலி அடையாள அட்டை மற்றும்  தமிழ்நாடு அரசு முத்திரையிட்ட 5 ரம்பர் ஸ்டாம்ப்கள் கைப்பற்றப்பட்டன. பழனிவேலை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு   ஆஜபடுபடுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்