நீர் நிரப்பும் இயந்திரம் வாங்கி தருவதாக மோசடி - மோசடி செய்தவரை கைது செய்த போலீஸ்

சென்னை மதுரவாயலில் தண்ணீர் கேனில் நீர் நிரப்பும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீர் நிரப்பும் இயந்திரம் வாங்கி தருவதாக மோசடி - மோசடி செய்தவரை கைது செய்த போலீஸ்
x
சென்னை மதுரவாயலில் தண்ணீர் கேனில் நீர் நிரப்பும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரவாயலை சேர்ந்த தயாளன் என்பவர், பாலேஸ்வர் சிங் என்பவரிடம், தண்ணீர் நிரப்பும் இயந்திரம் வாங்க ஏழரை லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். எந்திரத்தை வாங்கித் தராமல், காலம் தாழ்த்தியதால் தயாளன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இந்நிலையில் தயாளன் அளித்த கொலை மிரட்டல் புகாரில், விசாரணை நடத்திய மதுரவாயல் போலீசார்  பாலேஸ்வர்சிங் மீது மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.  வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா என்றும் போலீசார் தொடர்ந்து பாலேஸ்வர்சிங்கிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்