சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்த இருவர் கைது

20 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்
சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்த இருவர் கைது
x
கேரள மாநிலம், இடுக்கியில், வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மறையூர் என்னும் பகுதியில், சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் வனத்துறை அதிகாரிகளுடன் சோதனை மேற்கொண்ட போலீசார், 20 கிலோ சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருந்த  கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த ராஜேந்திரன், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்