தலைமறைவாக இருந்த சேலம் ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்

சேலத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல ரவுடி 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தலைமறைவாக இருந்த சேலம் ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்
x
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடியான தினேஷ் என்பவருக்கு, கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்டதும், தினேஷ் தலைமறைவானார். கடந்த 3 வருடமாக தலைமறைவாக இருந்த தினேஷை, சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் தனிப்படை அமைத்து தேடி வந்தார். இந்நிலையில் நேற்று சேலம் காட்டூரில் பகுதியில் பதுங்கி இருந்த தினேசை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். இதனையடுத்து அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்