உதவி ஆய்வாளர் வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை

மர்மநபர்களுக்கு திசையன்விளை போலீசார் வலைவீச்சு
உதவி ஆய்வாளர் வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை
x
உதவி ஆய்வாளர் வீட்டில் 125 சவரன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பியுள்ள மர்மநபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.நெல்லை மாவட்டம்   திசையன்விளை சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும், தர்மலிங்க பாண்டியன் நாகர்கோவிலில் உள்ள சிறையில் உதவி ஆய்வாளராக   பணியாற்றி வருகிறார். காலை தர்மலிங்க பாண்டியன் வேலைக்கு சென்ற நிலையில்,  அவரது மனைவியும் வீட்டில் இல்லாததைஅறிந்த மர்ம நபர்கள், வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். மாலை வீடு திரும்பிய ஜெயலட்சுமி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பிரோவில் இருந்த  125 பவுன் திருடு போயிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மோப்ப நாய் ரிக்கி மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்ம நபர்களை திசையன்விளை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்