டாஸ்மாக் கடையை துளையிட்டு மது பாட்டில் திருட்டு : 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

நாகர்கோவில் அருகே, மது வாங்க பணம் இல்லாததால், டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பாட்டில்களை திருடிய இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடையை துளையிட்டு மது பாட்டில் திருட்டு : 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
x
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் டாஸ்மாக் கடையில், சுவரில் துளையிடப்பட்டு மது பாட்டில்கள் திருடப்பட்டிருந்தன. விசாரணையில், திருவள்ளுவர் தினத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மது பானங்கள் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், மதுவை விற்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். மது வாங்க பணம் இல்லாததால், டாஸ்மாக் கடையில் திருடியதாகவும், மீதமிருந்த மதுவை விற்பனை செய்ததாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்