அரசுப் பள்ளியில் மூன்றரை டன் விடைத்தாள்கள் மாயம்...

திருச்சி மாவட்டம் முசிறியில் அரசுப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் தேர்வு விடைத்தாள்கள் மாயமாகியுள்ளது.
அரசுப் பள்ளியில் மூன்றரை டன் விடைத்தாள்கள் மாயம்...
x
திருச்சி மாவட்டம் முசிறியில் அரசுப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் தேர்வு விடைத்தாள்கள் மாயமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டு நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்கள், முசிறி கல்வி மாவட்ட அதிகாரி பொறுப்பில், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது. அங்கிருந்த பழைய விடைத்தாள்களை எடுத்துச் செல்ல திருச்சியில் இருந்து வந்த பணியாளர்கள், அந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது, பழைய விடைத்தாள்கள்  இல்லாதது கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர். மூன்றரை டன் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில் ஆட்சியர் தலையிட வேண்டும் என அப்பகுதியினர் கோரியுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்