கோழித் தீவனத்துக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி

450 மூட்டைகள் ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்- 4 பேர் கைது
கோழித் தீவனத்துக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி
x
விழுப்புரம் அடுத்த பூத்தமேடு பகுதியில் உள்ள பஞ்சு குடோனில் பதுக்கி வைத்து கடத்த முயன்ற 450 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன் வந்த போலீசார், லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த அரிசி மூட்டைகளை பிடித்தனர். மூட்டையை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த கடத்தல்காரர்கள் 4 பேரை கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் ஆய்வில், அரிசியின் மதிப்பு 17 லட்சம் ரூபாய் என்றும், தவிடு, நொய் குருணை சேர்த்து கோழித் தீவனமாக மாற்றப்பட்டதும், லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்றதும் அம்பலமானது. 

Next Story

மேலும் செய்திகள்