செல்போனில் பேசியபடியே கிணற்றில் விழுந்த பெண் - காப்பாற்ற சென்றவர்களும் உயிருக்கு போராடிய பரிதாபம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சின்னபிடாரியூரில் கிணற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்ற சென்றவர்களும் உயிருக்கு போராடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
செல்போனில் பேசியபடியே கிணற்றில் விழுந்த பெண் - காப்பாற்ற சென்றவர்களும் உயிருக்கு போராடிய பரிதாபம்
x
கணவரை பிரிந்து வாழும் சங்கீதா என்ற பெண், செல்போனில் பேசிக்கொண்டே, திடீரென கிணற்றில் குதித்த‌தாக கூறப்படுகிறது. இதனை கண்ட கதிரேசன் என்ற இளைஞரும், சுப்பிரமணி என்ற 60 வயது முதியவரும் சங்கீதாவை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளனர். கிணற்றில் படி ஏதும் இல்லாத‌தால், மூன்று பேரும் கிணற்றில் சிக்கி தவித்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் வந்து, மூவரையும் மீட்டுள்ளனர். சங்கீதா கிணற்றில் குதித்த‌து ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்