பொங்கலுக்கு தயாராகும் இயற்கை முறையில் வெல்லம்

இயற்கை முறையில் வெல்லம் தயாரிக்கும் விவசாயிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பொங்கலுக்கு தயாராகும் இயற்கை முறையில் வெல்லம்
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, இயற்கை முறையில் வெல்லம் தயாரிக்கும் விவசாயிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தெற்கு வெங்கநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த மருதூர் கம்மாய் பகுதி சுமார் 70 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு வரும் விவசாயி விக்னேஷ்வரன், தமது கரும்புக்கு உரிய விலை கிடைக்காததால், அதை வெல்லமாக்கி விற்றுவருகிறார். ரசாயனம் சேர்க்காது இயற்கை முறையில் எரு வைத்து உருவாக்கும் கரும்பு, அதிக விளைச்சலை தராவிட்டாலும், சொந்தமாக வெல்லம் தயாரிப்பதால் மனநிறைவுடன் இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். ஆண்டு முழுவதும் வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயி விக்னேஷ்வரன், மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்டோர் தமது வெல்லத்தை விரும்பி வாங்கிச் செல்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்