தர்மபுரியில் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவது குறித்து திருநங்கைகள் விளக்கம்
தர்மபுரியில் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தர்மபுரியில் வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் அணிவது குறித்தும், காரில் சீட்பெல்ட் அணிவது குறித்தும்  திருநங்கைகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சென்னை ரோட்டரி மிட்டவுன் சங்கம் மற்றும் தர்மபுரி ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. நான்கு ரோடு பகுதியில், வாகன ஓட்டிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணா்வு விளம்பரங்களை ஒலிக்கச்செய்து, அதற்கேற்ப திருநங்கைகள் சீட்பெல்ட் அணிவது குறித்தும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் சைகைகளின் மூலம் விளக்கம் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்