மணப்பாறை காளியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருச்சி மாவட்டத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மணப்பாறை காளியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
திருச்சி மாவட்டத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள காளியம்மன் கோயிலில் இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக தொடங்கியது. இதில் பால்குடம் எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர். தாரை தப்பட்டைகள் முழங்க இந்த நிகழ்வு நடந்தது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான கரகம் எடுத்தல், பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்