உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் தொழில் துறையினர் பங்கு முக்கியமானது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் மாவட்ட தொழில் துறையினர் பங்கு முக்கியமானதாக இருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் தொழில் துறையினர் பங்கு முக்கியமானது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
x
ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் மாவட்ட தொழில் துறையினர் பங்கு முக்கியமானதாக இருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்முறை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் தொழில்துறையினர் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும், . அதில் 520 தொழில் முனைவோர்களிடமிருந்து 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்