மின் கட்டண வசூலில் பல லட்சம் முறைகேடு : வருவாய் மேற்பார்வையாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

திருவாரூர் மின் வாரியத்தில், நுகர்வோர் செலுத்தும் கட்டணத்தில் பல லட்சம் முறைகேடு நடத்தது தொடர்பாக, வருவாய் மேற்பார்வையாளர்கள் 3 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மின் கட்டண வசூலில் பல லட்சம் முறைகேடு : வருவாய் மேற்பார்வையாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
x
மன்னார்குடி வட்டத்தில் மின் கட்டண வசூல் பணத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதனை கண்டறிய தனி மென்பொருள் 
உருவாக்கி அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் ரகசியமாக பொருத்தி, கண்காணிப்பு செய்ததில்,  இந்த கையாடல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, வருவாய் மேற்பார்வையாளர்கள், பர்வீன் நிஷா, செல்வநாதன், ஆனந்த் ஆகிய 
3 பேரை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மின் நுகர்வோரிடம் வசூல் செய்யும் பணத்தை கணினியில், தவறாக 
பதிவேற்றம் செய்து, கணக்குகளை குறைத்து காட்டி கையாடல் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்