சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடு புகுந்து திருடிய கல்லூரி மாணவன்

சென்னையில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடு புகுந்து திருடிய கல்லூரி மாணவன், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் சிக்கியுள்ளான்.
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடு புகுந்து திருடிய கல்லூரி மாணவன்
x
சென்னை கொத்தவால்சாவடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் இருந்து 10 சவரன் நகைகள் மற்றும் 50 
ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து, ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை  ஆய்வு செய்த‌தில், இளைஞர் ஒருவர் இந்த திருட்டில்  ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.  அந்த இளைஞர், சவுகார்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவரான தர்ஷன் என்பதை அறிந்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மாணவன் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்