போலீஸ்காரர் வீட்டில் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

சென்னை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர் வீட்டில் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது.
போலீஸ்காரர் வீட்டில் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
x
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக  சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் குமார் என்பவர் கொடுத்ததாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் நடத்திய சோதனையில், கையெறி குண்டுகள், கை துப்பாக்கி, தோட்டாக்கள் இருந்தததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீஸார், சென்னையிலிருந்து வந்த குமாரை மாட்டுத்தாவணியில் கைது செய்தனர். விதிமுறைகளை மீறி ஆயுதங்களை வீட்டில் வைத்திருந்த போலீஸ்காரரால் ஆளுநரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்