தகராறில் ஈடுபட்ட தம்பியை அடித்தே கொன்ற அண்ணன் குடும்பத்தினர்...

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தம்பியை, அண்ணன் குடும்பத்தினர் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்.
தகராறில் ஈடுபட்ட தம்பியை அடித்தே கொன்ற அண்ணன் குடும்பத்தினர்...
x
குருகூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார், தனது அண்ணன் கலைச்செல்வன் வீட்டிற்கு குடிபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின் போது, தனது அண்ணியை செந்தில்குமார் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வன் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டையால் செந்தில்குமாரை தாக்கியுள்ளனர்.  இதில் படுகாயமடைந்த செந்தில்குமார், ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணன் கலைச்செல்வன், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செந்தில்குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்