டிச.16ல் கருணாநிதி சிலை திறப்பு விழா : தொண்டர்களுக்கு திமுக தலைமை வேண்டுகோள்

டிச.16ல் கருணாநிதி சிலை திறப்பு விழா : தொண்டர்களுக்கு திமுக தலைமை வேண்டுகோள்
டிச.16ல் கருணாநிதி சிலை திறப்பு விழா : தொண்டர்களுக்கு திமுக தலைமை வேண்டுகோள்
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா வரும் 16ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அண்ணா அறிவாலயத்திற்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. சிலை திறப்பு விழாவை தொடர்ந்து,  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தொண்டர்களுக்கு  திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்