கஞ்சா வழக்கில் திடீர் திருப்பம் - போலி அரசு முத்திரைகள், சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு

கஞ்சா வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களது வீட்டில் போலி அரசு முத்திரைகள், சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு.
கஞ்சா வழக்கில் திடீர் திருப்பம் - போலி அரசு முத்திரைகள், சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு
x
நெல்லை பேட்டை அருகே கஞ்சா வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது வீட்டில் போலி அரசு முத்திரைகள் மற்றும் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மைலப்பபுரதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐயப்பன் , மணி மற்றும் சுந்தர் ஆகிய மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களது வீட்டில்  போலீசார் நடத்திய சோதனையில், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் , ஊராட்சி அலுவலர் போன்ற  போலி அரசு முத்திரைகள் மூலம் போலி சான்றிதழ்கள் சிக்கின.  அவற்றை  பறிமுதல் செய்த போலீசார் , இதற்கு 
உடந்தையாக இருந்த அவர்களின் தாய் முத்துவையும் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்