போலீசாரிடம் சிக்கிய பைக் திருடர்கள்...

குரோம்பேட்டை திருநீர்மலை சாலையில் இரவு நேர ரோந்து பணியில் போலீசாரிடம் சிக்கிய பைக் திருடர்கள்.
போலீசாரிடம் சிக்கிய பைக் திருடர்கள்...
x
சென்னையை அடுத்த குரோம்பேட்டை திருநீர்மலை சாலையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட குரோம்பேட்டை காவல்துறையினர் அவ்வழியாக வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த அவர்கள், மூவரும் இரு சக்கர வாகனத் திருடர்கள் என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவர்களிடமிருந்து ஒரு வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், மூவரையும் பம்மல் சங்கர் நகர் காவல்துறையினரிடம் ஒப்படைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்