பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை மாற்றும் விவகாரம் : தற்போதைய நிலையே நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றும் விவகாரத்தில், தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை மாற்றும் விவகாரம் : தற்போதைய நிலையே நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
x
மதுரையில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றும் விவகாரத்தில், தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொசு உள்ளிட்ட பூச்சிகள் பற்றி ஆய்வு செய்து வகைப்படுத்தும் இந்த ஆய்வு மையத்தை புதுச்சேரிக்கு மாற்றினால், ஏற்கனவே, தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் போன்றவற்றால் உயிரிழப்பு நேரிடும் நிலையில், பாதிப்பு அதிகமாகும் என அவர் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய 
அமர்வு, 'தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்