புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.4 கோடி செலுத்தப்பட்டது - அமைச்சர் விஜயபாஸ்கர்

புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பெட்டகத்தை வழங்கும் பணியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.4 கோடி செலுத்தப்பட்டது - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
புதுக்கோட்டையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை வழங்கும் பணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில்  புயலால் வீடுகளை இழந்தவர்களில் 10 ஆயிரம் பேருக்கு முதற்கட்டமாக  4 கோடி ரூபாய்க்கு வங்கி கணக்கில் செலுத்தபட்டுள்ளதாக தெரிவித்தார்.  மேலும் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 17 ஆயிரம் வீட்டு உரிமையாளர்களுக்கும் விரைவில் நிதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்