மேகதாது விவகாரம் : ஒருமனதாக தனி தீர்மானம் - ஜெயக்குமார்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கூடுகிறது.
x
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை, மீன்வளம் மற்றும் பணியாளர் , நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்