2019 நீட் தேர்வு விண்ணப்பங்கள் பதிவிடும் காலம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2019 நீட் தேர்வு விண்ணப்பங்கள் பதிவிடும் காலம் நீட்டிப்பு
x
2019 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பதிவிடும் காலம் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவிட இன்று கடைசி நாள் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பதிவிடும் காலத்தை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து டிசம்பர் 7 ஆம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவிட தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  அதேபோல் நீட் தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்த, டிசம்பர் 8 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்