அண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார். கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் மலையின் மீது ஏறும்போது அங்குள்ள மூலிகை மரங்களுக்கும், பசுமைக்கும் ஆபத்து உருவாகும் என்பதால் கடந்த ஆண்டு முதல் மலை ஏற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. தீபத்திருநாள் தவிர மற்ற நாட்களில் மலையேற தடை விதிக்கப்பட்டது. மேலும் மலை ஏற வேண்டுமென்றால் உரிய அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தீபத்திருநாள் முடிந்த நிலையில், மலையேற விதித்த தடை இன்று முதல் மீண்டும் அமலுக்கு வருவதாக கிருபாசங்கர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்