"ஒரு வாரத்திற்குள் மின்சாரம் வழங்கப்படும்" - அமைச்சர் தங்கமணி

"மத்திய அரசு, முதற்கட்டமாக மின் வாரியத்திற்கு ரூ. 200 கோடி" - அமைச்சர் தங்கமணி
x
கஜா புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைப்பு செய்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த நாமக்கல் மாவட்டம் மானுவக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த முருகேசனின் குடும்பத்திற்கு, தமிழக அரசு அறிவித்த ரூ.15 லட்சம் நிதியில் முதற் கட்டமாக மின் வாரியத்தின் சார்பில் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை மின்துறை அமைச்சர் தங்கமணி நேரில் வழங்கி, ஆறுதல் கூறினார் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கஜா புயலால் எதிர்பார்த்ததை விட அதிக மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதால் ஆந்திராவில் இருந்து மின் கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது என்றார்.18 முதல் 20 கி.மீ. தூரம் உள்ளதால் ஒரு டிரான்ஸ்பார்மரை சரி செய்ய 70 முதல் 100 மின்கம்பங்கள் வரை தேவைப்படுகிறது என்றும், ஊரக பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் மின் விநியோகம் தரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்