குழந்தை கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா - தனியார் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் ஆவேசம்

குழந்தை கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா கும்பல் செயல்படுவதாகவும், இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கொலை குற்றத்துக்கான தண்டனை வழங்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
x
குழந்தைகளின் நலனுக்காக peace  for children என்ற ஒரு அமைப்பை, லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். இதற்கான 
மாபெரும் இசைநிகழ்ச்சி, சென்னை திருவான்மியூரில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், ராகாவா லாரன்ஸ், மீனா, ஒய்.ஜி.மகேந்திரன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில்,  குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் புதிய செயலி , தொலைபேசி எண்  மற்றும் இ.மெயில் முகவரியை   துவக்கி வைத்து பேசிய ரஜினிகாந்த், குழந்தைகள் மீது மத்திய - மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்