பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு

மதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.
பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு
x
மதுரை பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்ற 14 - க்கும் மேற்பட்ட கொலைகள் தொடர்பாக குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் விளாங்குடியில் இருந்து சமயநல்லூர் செல்லும் வழியில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பிரமுகர் சோலை ரவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீஸார் சுற்றி வளைத்தனர்.  

பலர் தப்பியோடிய நிலையில், 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர் கொலைகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது.  

இதனையடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று எழுத்துபூர்வமாக அவர்கள் உறுதியளித்த பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மீறினால் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை போலீஸார் எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்