விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி

ஜி- சாட் 29 செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி
x
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில், அதி நவீன
தகவல் தொடர்பு சேவைக்காக ஜி- சாட் 29 செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, மாலை 5.08 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. 

புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தி,  சாதனை




உயர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள ஜி- சாட் 29 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி, புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அப்போது, தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்துக்கொண்டிருந்த விஞ்ஞானிகள், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.  400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு உள்ள ஜி- சாட் 29 செயற்கைக்கோள், குக்கிராமங்களையும் உள்ளடக்கி, நாடு முழுவதும் அதி நவீன தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த  முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மைல் கல் : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்



ஜி- சாட் 29 செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதின்
மூலம்  விண்வெளி துறையில் இந்தியா புதிய மைக்கல்லை எட்டியுள்ளதாக
இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி மாதம் சந்திரயான் 2 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்

விண்வெளி துறையில் இந்தியா புதிய மைக்கல்லை எட்டியுள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி 2 ராக்கெட்டின் முதல் இயக்க பயணமாக, வரும் ஜனவரி மாதம் சந்திரயான் 2 செயற்கைகோள் திட்டம் இருக்கும். அதுமட்டுமில்லை, இதே செலுத்து வாகனம் தான், 3 ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதனை சுமந்து செல்ல இருக்கிறது.




Next Story

மேலும் செய்திகள்