எஞ்சின் கோளாறு - பாதிவழியில் நின்ற மலை ரயில் : சுற்றுலாப் பயணிகள் அவதி
உதகை மலை ரயிலில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
உதகை மலை ரயிலில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள். மாலை 3 முப்பது மணிக்கு சுமார் 170 பயணிகளுடன் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சென்ற மலைரயில், காட்டேரி அருகே வந்தபோது என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயில் பாதிவழியில் நின்றது. இதை தொடர்ந்து ரயில் பயணிகள் அரசு பேருந்துகளில் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர். மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு பின்னர் ரயில் குன்னூர் கொண்டுசெல்லப்பட்டது.
Next Story