மருந்துகடை நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்த 3 பேர் கைது

6 பேரிடம் போலீஸ் விசாரணை
மருந்துகடை நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்த 3 பேர் கைது
x
அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில்  வருவாய், சுகாதாரம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.  அப்போது ராயம்புரம், குழுமூர், மீன்சுருட்டி, காட்டாத்தூர், உட்கோட்டை, பிலாக்குறிச்சி உள்ளிட்ட 9 இடங்களில்  மருந்து கடை நடத்துபவர்களும், ஹோமியோபதி படித்த சிலர், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுகளத்தூரைச் சேர்ந்த பழனியாண்டி, மீன்சுருட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்,  சுப்பிரமணியன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்