சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த 52 வயதான சமையல் தொழிலாளி கணேசன், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, குற்றம் சாட்டப்பட்ட முதியவர் கணேசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story