கணவரை தாக்க முயற்சி : தடுத்த மனைவி மீது ஆசிட் வீச்சு...
ராமேஸ்வரம் அருகே இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள டி.எம்.எஸ் நகர் மற்றும் ராஜீவ் காந்தி நகர் பகுதி இளைஞர்களுக்கு இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த வெண்மணியை இளைஞர்கள் தாக்க முயன்ற போது, அவரின் மனைவி கவுசல்யா அவர்களை தடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் கவுசல்யா மீது ஆசிட்டை வீசி சென்றுள்ளனர். கழுத்து பகுதியில் காயங்களுடன் கவுசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story