பட்டாசுகளின் பரிணாம வளர்ச்சி எப்படி?

தீபாவளி என்றாலே பட்டாசு தான். இந்த பட்டாசுகளின் பயணம்
பட்டாசுகளின் பரிணாம வளர்ச்சி எப்படி?
x
* பட்டாசுக்கு, 2 ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. இன்று, உலகமெங்கும் பட்டாசு பயன்படுத்தப்படுகிறது. பட்டாசைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். சீனத்திற்கு வந்த பல்வேறு பயணிகளின் வழியாக, உலகமெங்கும் பரவியது பட்டாசு.

* பட்டாசு கண்டுபிடிக்கப்பட்டது, ஒரு தற்செயல் நிகழ்வு தான். அறிவியல் பயன்பாட்டுக்கு முந்திய பழங்காலத்திலேயே, சீனர்கள் பட்டாசைக் கண்டுபிடித்து, வெடிக்கச் செய்துள்ளனர். 

* உலகிலுள்ள எல்லாரையும் போலவே சீனர்கள், தங்கள் சமையலுக்கு உப்பைப் பயன்படுத்தத் தொடங்கினர். பல்வேறு உப்பு நீரைக் காய்ச்சியும், உப்புச் சுவையுள்ள பாறைப் படிவுகளைச் சுரண்டி எடுத்தும், தங்களுக்குரிய உப்பைப் பெற்றனர். 

* சீனர்கள் காய்ச்சிய உப்புக் கற்களில் பொட்டாசியம் நைட்ரேட் கலவை மிகுந்திருந்தது. அது தீயில் பட்டதும் பொறிகளை எழுப்பி, எரிந்து அணையக் கூடிய தன்மையைக் கொண்டது. 

* பொட்டாசியம் நைட்ரேட் கலந்த உப்பைச் சமையலுக்குப் பயன்படுத்தியபோது, அந்த உப்புக்கற்கள் தவறி நெருப்புக்குள் விழுந்தன. நெருப்பில் விழுந்த உப்புக் கற்கள் மத்தாப்புகளைப் போல், பொறித் துகள்களை உதிர்த்தபடி, எரிந்து அடங்கியது. 

* இதுதான் பட்டாசுக்கான மூலப்பொருளைச் சீனர்கள் கண்டறியக் காரணமான முதல் வினை. ஒளியைத் தோற்றுவிப்பதற்காகத் தான் இது முதலில் பயன்படுத்தப்பட்டது.

* அந்த உப்பைக்கொண்டு, பல்வேறு ஒளிரும் செயல்களை சீனர்கள், நிகழ்த்தினர். அந்த ஒளி, தகதகப்பாகவும் கண்ணைப் பறிக்கும் படியாகவும் இருந்தது.  

* பிறகு, மூங்கில் குருத்துக்குள், அந்த வெடி உப்பை நிரப்பி, பற்ற வைத்தனர். அது, காதைப் பிளக்கும் சத்தத்தை எழுப்பியபடி வெடித்தது. பின்னர், கரியும் கந்தகத் தூளும் கலந்த கலவை, இவ்வாறு வெடிக்கும் தன்மையுடையதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

* இறுக்கமான மூங்கில் குருத்துக்குள், வெடி பொருளை நிரப்பி தீப்பற்ற வைத்தனர். அந்த வெடிமருந்து தீயினால், திடீரென்று விரிவடைவதால், தம்மைச் சூழ்ந்திருக்கும் மூங்கில் தடுப்பை தகர்த்தது.  அந்தத் தகர்ப்பொலி தான், வெடியோசையாக கேட்கிறது. 

* மூங்கில் குருத்துக்குள் கீழ்ப்பகுதியை அடைக்காமல் விட்டு, ஒரு வால்குச்சியைக் கட்டினால், அந்த வெடிமருந்து திறந்திருக்கும் பகுதியில் விரைந்து வெளியேறுகிறது. அதனால் பெறப்படும் உந்து விசையைக்கொண்டு எந்தத் திக்கிலும் ஏவலாம். அந்த முறையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டது தான் வாணவேடிக்கை. 

* இதன் மேல் நுனியில் வெடிமருந்துக் கலவையை அடர்த்தியாய் அடைப்பதன் மூலம், வெடிக்கவும் வைக்கலாம். அம்முறைப்படிதான் வானில் ஏவப்படும் வாணங்கள், வெடித்துச் சிதறுகின்றன.

* சீனர்கள் பட்டாசுப் பயன்பாட்டை அறிந்தவுடன், தீயசக்திகளை விரட்டுவதாக கருதினர். சீனத்து பௌத்தத் துறவியொருவர், பட்டாசு சத்தத்தால் தீயவை அகல்கின்றன என்று கூறினார். அவர் கூறியவாறு, சீன அரசர்கள் பங்கேற்கும் எல்லா விழாக்களிலும் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன. 

* ஏழாம் நூற்றாண்டிலேயே பட்டாசு தயாரிக்கும் நுட்பங்களைப் பற்றி எழுதப்பட்ட சீனக்குறிப்புகள் உள்ளன. பட்டாசைக் குறிப்பிடும் 'பயர் ஒர்க்' என்பது, ஜப்பானில் இருந்து வந்த சொல். இதற்கு, நெருப்பு மலர் என்று அர்த்தம்... 

இந்தியாவிற்கு எப்போது வந்தது...?

* 1922ம் ஆண்டுகளில், கொல்கத்தாவில், ஜப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இந்தியாவிலேயே கொல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. 

* அப்போது சிவகாசியிலிருந்து, தீப்பெட்டி தொழிலை கற்றுக் கொண்டு வந்துள்ளனர்.... சிவகாசியில், 1928இல் தீப்பெட்டி தொழிற்சாலை உருவானது. அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. 

* இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு, சிவகாசியில் நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்