நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது

நகை வாங்குவதற்காக சென்னை சென்ற நகைக்கடை ஊழியரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது
x
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில், நகை வாங்குவதற்காக சென்னை சென்ற நகைக்கடை ஊழியரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் இரு தினங்களுக்கு முன்பு கொள்ளையடித்து சென்றனர். 
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நகைக்கடை உரிமையாளரின் இரண்டாவது மகனான சையது ஜிலாமியின், அறிவுறுத்தலின் பேரில் அவரது நண்பர்களே பணத்தை கொள்ளயடித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.  இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்