உள்ளாட்சி தேர்தல் முன் விரோத கொலை வழக்கு : முன்னாள் பெண் ஊராட்சி தலைவர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

உள்ளாட்சி தேர்தல் முன் விரோத கொலை வழக்கு : முன்னாள் பெண் ஊராட்சி தலைவர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
உள்ளாட்சி தேர்தல்  முன் விரோத கொலை வழக்கு : முன்னாள் பெண் ஊராட்சி தலைவர் உட்பட  8 பேருக்கு ஆயுள் தண்டனை
x
கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட முன் விரோதத்தால், அதே ஊரைச் சேர்ந்த புதுராஜன் என்பவர், 2012ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சிதம்பரம் அருகே உள்ள லட்சுமிகுடி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கலைவாணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில், சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்