புதரில் விளையாடிய சாரை பாம்புகள்
புதரில் விளையாடிய சாரை பாம்புகள்
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா.பேட்டையில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிண்ணியவாறு நீண்ட நேரம் விளையாடியதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் வழியில் கோயில் அருகே உள்ள புதரில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிண்ணியவாறு விளையாடியது. இதனை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பலர் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story