7 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த 25 பேரை வருவாய் துறையினர் மீட்டுள்ளனர்.
7 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு
x
திருவள்ளூர் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த 25 பேரை வருவாய் துறையினர் மீட்டுள்ளனர்.  சாமிநாயுடு கண்டிகையில் வருவாய் துறையினர் சோதனை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம் வில்வநத்தத்தை சேர்ந்த   ராஜா, சேகர் என்ற 2 புரோக்கர்களிடம்,   7 வருடங்களாக 7 குடும்பங்களை சேர்ந்த 8 குழந்தைகள் உள்பட 25 பேர் கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்தது. அவர்களை மீட்ட கோட்டாட்சியர் பவனந்தி,   25 பேருக்குக்கும் தலா ஆயிரம் ரூபாய் முதலுதவி தொகையை வழங்கினார். பின்னர் மீட்கப்பட்ட அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்