ரயில்வே திருச்சி கோட்ட மேலாளருடம் அதிமுக எம்.பி சந்திப்பு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நின்று செல்ல உத்தரவிடுமாறும் கோரிக்கை வைத்ததாக அதிமுக எம்.பி சந்திரகாசி கூறினார்.
சிதம்பரம் வந்த தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டியை, சிதம்பரம் அதிமுக எம்.பி சந்திரகாசி நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி ரயில்வே கோட்ட மேலாளரிடம் வலியுறுத்தியதாகவும், சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நின்று செல்ல உத்தரவிடுமாறும் கோரிக்கை வைத்ததாகவும் கூறினார்.
Next Story