கனமழையால் அரசுப் பேருந்தில் குடைபிடித்து சென்ற பயணிகள்

நெல்லை மாவட்டம் பழவூரில் இருந்து வள்ளியூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில், குடைகளை பிடித்தபடி மக்கள் பயணம் மேற்கொ​ண்டனர்
கனமழையால் அரசுப் பேருந்தில் குடைபிடித்து சென்ற பயணிகள்
x
நெல்லை மாவட்டம் பழவூரில் இருந்து வள்ளியூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில், குடைகளை பிடித்தபடி மக்கள் பயணம் மேற்கொ​ண்டனர். பழவூரில் இருந்து  பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் பேருந்திற்குள் ஒழுக தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்த குடை வைத்திருந்தவர்கள், குடையை எடுத்து விரித்து பிடித்துள்ளனர்.  குடை எடுத்து வராத முதியவர்கள் உள்பட பயணிகள் நனைந்தபடியே பயணம் செய்துள்ளனர். மழைநீர் பேருந்தில் தேங்கியதாகவும், வள்ளியூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளின் நிலை இதுதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்