புழல் சிறை ஆய்வாளரை தாக்க கைதிகள் திட்டம் : அதிர்ச்சி தகவல்

புழல் சிறையில் பணிபுரியும் ஆய்வாளரை தாக்க, கைதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.
புழல் சிறை ஆய்வாளரை தாக்க கைதிகள் திட்டம் : அதிர்ச்சி தகவல்
x
சமீபத்தில், சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகள் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி, சர்ச்சையை கிளப்பின. இதையடுத்து, சிறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில், சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் வெளியானதற்கு, சிறையில் உள்ள அதிகாரிகள் தான் காரணம் என முடிவு செய்த கைதிகள், அவர்களை தாக்க திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. 

தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்,  போலீஸ் பக்ருதீன் என்ற கைதி, புழல் சிறையில் விஜிலென்ஸ் ஆய்வாளராக பணிபுரியும் சுப்பையா என்பவரை தாக்க திட்டம் தீட்டியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்காக, சிறைத்துறை டிஐஜி முருகனின் வீட்டில் பணியாற்றும் கைதி ஒருவருடனும், ஆய்வாளர் சுப்பையாவின் ஒட்டுனருடனும், போலீஸ் பக்ரூதீன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்