ஆசிய அளவில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் சாதனை - ஊர்திரும்பிய வீரர்களுக்கு சீர்காழியில் உற்சாக வரவேற்பு

மலேசியாவில் கடந்த மாதம் ஆசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர்.
ஆசிய அளவில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் சாதனை - ஊர்திரும்பிய வீரர்களுக்கு சீர்காழியில் உற்சாக வரவேற்பு
x
மலேசியாவில் கடந்த மாதம் ஆசிய  அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில், மலேசியா, இந்தியா உள்ளிட்ட  6 நாடுகளை சேர்ந்த  300 பேர் பங்கேற்றனர். கோலாலம்பூர் விளையாட்டு அரங்கில்நெ டுங்கம்பு, நடுகம்பு, சுருள்வாள், மான் கொம்பு, வாள் வீச்சு என பல்வேறு பிரிவுகளில்  போட்டிகள் நடைபெற்றது. குழுவிற்கான போட்டியில் சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தினர் மூன்றாமிடத்தையும், தனிநபர் பிரிவில் மாற்று திறனாளி வீரர் விமல் 4 தங்க பதக்கங்களை பெற்றார். விருதுகளுடன் நேற்று சீர்காழி வந்தவர்களுக்கு புதிய பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அவர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்