பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சிலைகள் கொள்ளை - கண்காணிப்பு கேமராவில் பதிவான இருவர் உருவம்

கொள்ளை அடிக்கப் பட்ட 4 பஞ்சலோக ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சிலைகள் கொள்ளை - கண்காணிப்பு கேமராவில் பதிவான இருவர் உருவம்
x
மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறையில்  உள்ள  2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் , வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு சிலைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன. இது குறித்து அறிந்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கோவிலுக்கு  நேரில் சென்று விசாரணை நடத்தினார் . கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இருவர் முகமுடி அணிந்து  சிலைகளை கொள்ளை அடித்து சென்றது பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை அடிக்கப் பட்ட 4 பஞ்சலோக ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய்  இருக்கும் என்று தெரிய வந்துள்ளது 

Next Story

மேலும் செய்திகள்