போலி சான்றிதழ்கள் வழங்கி வந்த பெண் கைது

திருப்பூரில் தாசில்தார் உள்ளிட்ட அரசு அலுவலர்களின் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்களை வழங்கியதாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
போலி சான்றிதழ்கள் வழங்கி வந்த பெண் கைது
x
திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த மாசானவடிவு என்ற பெண் அரசு அலுவலர்கள் போன்று கையெழுத்திட்டு சான்றிதழ்கள் வழங்கி வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்பகுதியில் அழகு நிலையம் நடத்திவரும் மகேஷ்வரி என்ற பெண்ணுக்கும்,  சுதாகர் என்ற வழக்கறிஞருக்கும் இதில் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில், கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மகேஷ்வரியை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் சுதாகரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்