8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சேலம் 8 வழி சாலை வழக்கில் ஆரம்பத்திலிருந்தே அரசு வழக்கறிஞர்கள் அலட்சியமாக செயல்படுவதாக கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என, எச்சரித்துள்ளது.
8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
x
சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என  பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, இத்திட்டத்திற்காக தர்மபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது குறித்தும், பதிலுக்கு மரம் நடப்பட்டது குறித்தும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம்  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், அது குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் இதற்கு  பதிலளிக்க கால அவகாசம் அளிக்க கோரியும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 8 வழி சாலை வழக்கில்,துவக்கத்திலிருந்தே, அரசு வழக்கறிஞர்கள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.சமீபத்தில் சென்னை முழுவதும் வைக்கப்பட்ட பேனரில் அரசு வழக்கறிஞர் ஒருவரின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவை அரசு வழக்கறிஞரே மீறுவதை ஏற்க முடியாது எனத் நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு வழக்கறிஞர் பதவிக்கு ஒரு மரியாதை உள்ளது. அதை கெடுக்கும் விதத்தில் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடுமெனக் கூறி, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்