தமிழகத்தில் முதல்முறையாக 2 அடுக்கு பேருந்து நிலையம்...

தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னையில், சுமார் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு பேருந்து நிலையம் வரும் 10-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக 2 அடுக்கு பேருந்து நிலையம்...
x
* சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால், மாதவரம் ரவுண்டானா அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில், தரை தளத்தில் 51 பேருந்துகளையும், மேல்தளத்தில் 50 பேருந்துகளையும் நிறுத்தி வைக்க முடியும்.  

* 9 மாநகரப் பேருந்துகளுக்கு இந்த பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆந்திர மாநிலம், நெல்லூர், திருப்பதி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன. 

* பயணிகள் தங்கும் இடம்,  தாய்மார்கள் பால் ஊட்டும் அறை, நடத்துனர் ஓட்டுநர் தங்கும்  வசதி உள்ளிட்டவை இந்த இரண்டு அடுக்கு பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

* இந்த புதிய பேருந்து நிலையத்தால், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது. 

* தமிழகத்திலேயே முதல்முறையாக கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு பேருந்து நிலையத்தை, வரும் 10-ஆம் தேதி திறப்பதற்காக ஏற்பாடுகள் முழூ வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்